எனது கீதங்கள்
காட்சிகள் என்பது இசைக்கக் கருவிகள்
கண் இமை என்பது மீட்டவே கரங்கள்
இசைத்திடும் போதிலே பிறக்கின்ற கானங்கள்
இரு விழி திறக்கையில் பார்க்கின்ற தூரங்கள்
எல்லைகள் என்பது அதற்கு இல்லை
ஏனெனில் இசைக்கு வரைமுறை இல்லை
கல்பனா சாஸ்திரம் கற்றவர் புரிவர் மனக்
கண்களின் தூரத்தை அவரே அறிவர்......!!