நாதாரிகளின் நாரதவேலை -அமுதினி

சேற்றில் நிற்கும்
உழவனைக்கண்டு
சாக்கடையை குடிக்கும்
மானிடன் சொன்னாம்
அய்யே அசிங்கமென்று

குரங்கின் வாலாய்
மாட்டிக்கொண்ட
அல்பங்கள் சொல்லிச்சாம்
அற்புதங்கள் தப்பானவை என்று.

சாணி போட்டு வழிச்ச வீட்டில்
சாக்கடையில் குளித்தவன் வந்தானாம்
சத்தமாய் சொன்னாம்
அய்யே நாற்றமென்று.

கவிதைகளை எழுதுவதைவிட்டு
நூறு வண்டி குப்பைகளை
முதுகில் சுமந்து
அடுத்தவன் முதுகில்
ஒரு தூசியிருக்கிறது
கண்ணை உறுத்துகிறது என்று
கூப்பாடு போடுகிறாராம்
கவிஞர் ஒருவர்.

தன் வீட்டு பத்தினியை
தன் மனைவியா
பரிசோதிக்கட்டும்
மாக்கள்
பின்பு சொல்லட்டும்
அமுதினி இவன் மனைவி என்று.

எழுதியவர் : அமுதினி (1-Apr-15, 11:56 am)
பார்வை : 157

மேலே