புகை உனக்கு பகை
விரலிடுக்கில் பிடித்து
ஒரு முனையில் தீ மூட்டி
மறுமுனையை பற்றி
உதடுகளில் பொருத்தி
உயிரை உறிஞ்சி
சிறிது சிறிதாய் உருக்கி
இறுதியில்
காலடியில் மிதித்து நசுக்கி
அலட்சியமாய் புகை கசிய
நடந்தாயே...
நண்பா...!
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்."
என்னும் திருக்குறளை
நீ அறிவாயா..?