சித்திரை முழுநிலவே

மேகங்கள் சூழ்ந்தாலும்
பிறை அழகாலே எனை ஆளும்
வானழகி நீ...

கதிரவன் பால் மலர்ந்தாலும்
என் கழனியிலே தவழ்ந்தாடும்
பேரழகி நீ...

ஒருநாள் தான் என்றாலும்
மனம் முழுதும் ஆட்கொள்ளும்
மாதவி நீ...

இதுபோதும் என்றாலும்
இன்றியமையாமல் எனைக் கொல்லும்
அழகாட்கொல்லி நீ...!

எழுதியவர் : அருண் வேந்தன் (6-Apr-15, 5:55 pm)
பார்வை : 158

மேலே