ஏன் பிடித்தது உன்னை

தெரியவில்லை,
எனக்கு தெரியாமலும் இல்லை
ஏன் பிடித்தது உன்னையென்று...???

ஆயிரம் பேருக்கு மத்தியில்
என்னை கடத்தி சென்ற
உன் கடைகண் பார்வையால் பிடித்ததோ உன்னை ???

அம்பு ஏதும் இல்லாமல்
என்னை வந்து தாக்கிய
வில்லான உன் புருவங்களால் பிடித்ததோ உன்னை ???

விழுந்தும் அடிப்படாமல் எழுந்த என்னை
மறுபடியும் விழவைத்த
உன் கன்னத்து குழியால் பிடித்ததோ உன்னை ???

நீ பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம்
பேசாமலே என் மனதில் ஒலிப்பதால்
பிடித்ததோ உன்னை ???

நாளறையில் பத்திரபடுத்தி வைத்திருந்த
என் இதயத்தை நாளே நொடியில்
நாசுக்காய் களவாடி சென்றதால் பிடித்ததோ உன்னை ???

நான் காதல் பயணம் செய்யவேண்டும் என்று
உன் பாத தடயங்களை விட்டுசென்றதால்
பிடித்ததோ உன்னை ???

நீ சொல்ல வேண்டிய காதலை
நான் சொல்லும்போது
உன் மௌனம் சம்மதம் தெரிவித்ததால் பிடித்ததோ உன்னை ???

காதலை என்னிடம் சொல்லாமல் மறைக்கும்
உன் பெண்மையின் வெட்கத்தால்
பிடித்ததோ உன்னை ???

கல்விகூட கற்காத என்னை
காதலனாக்கி இன்று கவிஞனாக்கியதால்
பிடித்ததோ உன்னை ???

உன்னை அதிகமாக பிடித்ததால்தான்
என்னவோ எனக்கு
பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போனது...அன்பே...

இப்படி,
உன்னை பிடித்ததிற்கு ஆயிரம் காரணங்கள்
என்னால் சொல்ல முடியும்.......
ஆனால்,
காரணமே இல்லாமல் நீ மட்டும்
ஏன் அன்பே என்னை வெறுக்கிறாய் ???


# எனக்கு பிடித்துபோனது உன்னை,
உனக்குமட்டும் பிடிக்காமலேபோனது என்னை #


இப்படிக்கு,
நான்
# காதலில் விழவில்லை
காதலிக்க ஆசையுமில்லை #

எழுதியவர் : ஸ்ரீ தேவி (10-May-15, 9:45 pm)
பார்வை : 275

மேலே