காதலும் கூட நிலையானது

காதலே போர்க்களம் ஆனதால்
சிறகுகளில் அடைக்கலம்
சிதறியே இடறியே
படர்ந்திடும் வலிகளும்
விழி ஏந்தும் நீர்க் குளத்தில்
மீன்களாக...

மோதலோ முட்டுதலோ
முரண்பாடில்லாத முந்துதலில்
முடங்கி போகும் உணர்வுகள்
உருகிப் போகும் நினைவுகள்
உறைந்திடும் உயிர்களும்
கரைந்துப் போகக் கூடுமென்றால் ...

காதலும் கூட நிலையானது...

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (22-May-15, 9:44 pm)
பார்வை : 207

மேலே