புரிதலின்றிப் புழுதி மயம்
பழகிய நட்பும் பாங்கான உறவும்
புரிதலின்றி புழுதியாய் ...
யாரோ ஒருத்தியாய் உனைநெருங்க
நடலையில் நசுங்கிநான் நலிவுற
இரட்டைக்கிளவி பிரிந்து பொருளானது .....
நாலுப்பக்கம் சூழ்ந்த புயலால்
நாடுகடந்து செல்லும் நாவாயொன்று
நாதியற்று திக்கித் திணறுகிறது . ..
உறவென்னும் மூடுபனி சூழ
உன்னை நெருங்கும் என்னுருவம்
உன்விழிக்கு ஒளிசேர்க்க மறுக்கிறது .....
மந்தமாருத மொன்றில் மண்டைச்சளி
பிடித்த என்நாசி உன்வாசம் நுகர
முடியாமல் உள்ரோமத்தை நீக்கும்
முயற்சியில் முட்டிமோதி தோற்றதை
முன்மொழியும் முன் நம்முறவு
புரிதலின்றி புழுதியாகி போனது ....