நானும் காந்தனும்

இப்போதைக்கு என்பெயர்
நான்... என்போல அனேகரின் எதிர்வீடுகள்
காந்தனுடையதாக இருக்கலாம்...

காந்தனுடைய வீடு பூட்டியே
இருந்தாலும்.... நான் வீட்டுக்
திருட்டுக் கொலைகளைப் போலோன்றும்
சாதாரணம் அல்ல...
காந்தன் வீடு பூட்டியிருப்பது....

விளம்பர இடைவேளைகள் விட்டு
விவாதம் தொடருமளவிற்கு...
வரலாற்று முக்கியத்துவம் இருப்பதாய் செய்தி
சொன்னது....

அரைப்பக்கம் ஆக்கிரமித்திருந்த
காந்தன் மகள் தேர்ச்சிக்குக் கீழ்
என்னைப் போலொரு நானின் மகளும்
சிறியதாக தேர்ச்சியடைந்திருப்பாள்...

அந்த நானின்... செருப்புத் தைக்கும்...
சவரம் செய்யும்.. மூட்டை தூக்கும்
அடையாளங்களும் தவறாமல் சொல்லிவிடும்
செய்திகள்....

காந்தன் காதலித்திருப்பான்....
செய்தி....! நானும் காதலித்திருப்பான்...
அது செய்தியாக.. நானின் காதல்..
கர்ப்பமடைய வேண்டும்.. அன்றி
கௌரவக் கொலை செய்யப்பட வேண்டும்...

காந்தனின் சுண்டுவிரல்
கீறலுக்குப் பற்றிக்கொண்ட செய்தி.....
காந்தனைப் போலவே
சுண்டுவிரல் வைத்திருக்கும் நான் ஒருவன்
குதித்துச் செத்துப் போனதை
மறந்திருக்கும்....

காந்தனும் மறுநாள்
வெளிச்சங்களுக்கு முன்னால்
துக்கித்தவாறே பேசிக்கொண்டிருப்பான்...
காந்தன் வேறல்ல... நான் வேறல்ல..

அப்போதும் காந்தனின்
புகைப்பட மூலையில்
பெட்டிச் செய்தியாகியிருக்கும்
நான் என்னும்..... சமூகத்தின் மரணம்....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (27-May-15, 10:11 am)
பார்வை : 62

மேலே