டாஸ்மாக்-மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

வானம் மழையை கட்டவிழ்த்து விட்டு கொண்டு இருந்த நேரம் 9.50pm. சாலை எங்கும் ஜன நடமாட்டம் வெறிச்சோடி இருந்தது அப்பொழுது கையில் குடை இல்லாமல் தனியே ஒருவன் நடந்து சென்றான் .

சாலையோர கூட்டுக்கள் கூடி இருந்த எல்லோரும் அவனையே ஆச்சரியமாக பார்த்தார்கள் . என்ன இது?? யார் இவன்??என்று .. அவன் எதை பற்றியும் சிந்திக்காமல் மழையில் நனைந்தவாறே ஒவ்வொரு அடியும் அளந்து வைத்து நடந்தான்...

சற்று நேரத்தில் மழை நின்றது ..கூட்டுகள் கூடி நின்ற ஜனம் அவசரமாக கிளம்பியது.தனியே நடந்து சென்றவனை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறினார்கள் .மீண்டும் மழை துளிர்த்தது .அனைவரும் மீண்டும் சாலையோர கூட்டுக்கள் கூடினார்கள் .. அவன் மட்டும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தான் முதலாய் எவரை பற்றியும் சிந்திக்காமல் ...!!!!!

எழுதியவர் : அருண்வாலி (27-May-15, 6:36 pm)
பார்வை : 711

மேலே