வருத்தம் தெரிவிக்கிறேன் - சந்தோஷ்

வருத்தம் தெரிவிக்கிறேன்

எந்த வரையிலும் இல்லாது
இதுவரையிலும் எழுதிய
கற்பனைக்கு கருவுற்ற
காதல் எழுத்துகளை
கையாண்டிருந்தால்...

விஞ்ஞான வளர்ச்சியோடு
ஆடைக்குறைத்து அலையும்
சில நாகரீக கண்ணகிகளுக்காய்
வக்கலாத்து கொடித்தூக்கிய
மாதர்சங்கத் தலைவிகளுக்கு
ஆதரவு மைச்சிந்தும்
எந்தன் பெண்ணியப் பேனாவை
எந்தக் கண்ணோட்டமில்லாது
பயன்படுத்தியிருந்தால்..

தொடைப்பார்த்தால் இடைத்தெரிந்தால்
உடைவிலகினால் பொழுப்போக்காய்
நல்ல மாதவிகளையும் தேடி
கற்பழிக்கும் போக்கரிகளின்
கற்பழிப்புச் சாதனத்தை
துண்டிக்க ஓடாமல்
கண்டித்து எழுதியே
குளிர்சாதன அறையில்
சமூக வியாக்கியனம் எழுதும்
எந்தன் போராளித்தனம்
வேடத்தாரியாகியிருந்தால்.....

வருத்தம் தெரிவிக்கிறேன்.


அரசியலில் இதெல்லாம் சகஜமென்று
அதிகாரப்பூர்வமாய்
இன்னும் கூட நடக்கும்
நீதியை அநீதிக்கு
கூட்டிக்கொடுக்கும் வியாபாரத்தையும்
கூட்டணிப்போட்டு கூறுப்போடும்
அரசியல் வியாதிகளிடம்
பிச்சையெடுத்து மயிர்வளர்க்கும்
ஊடகங்களையும்...
எதிர்க்கத் திராணியற்று
நானும்
எழுத்தாளன் எழுத்தாளன்
என கூவியிருந்தால்...

வருத்தம் தெரிவிக்கிறேன்.

இனியேனும்
நானெழுதும் எழுத்துகளினால்
ஓராயிரம் மிரட்டலுக்கு
அடிப்பணிய நேரிட்டால்...
விமர்சனத்தனவாதிகளின்
விஷமத்தனத்திலென்
கர்வமும் திமிரும்
மன்னிப்புக் கண்ணீர்த்துளிகள்
ஏதும் சிந்த நேரிட்டால் ...


நன்றாக பழக்க காய்க்கப்பட்டு
சூடேற்றப்பட்ட
சிலுவைப் போலதொரு
ஒரு சிலுவையில்
எந்தன் கைகளை கட்டி
உங்கள் எச்சில் கோடாரிகளை
என் நடுநெற்றியில் செலுத்திடலாம்.
உங்கள் விமர்சனப்பற்கள்
எந்தன் ஆண்மைக்குறியை
பதம் பார்த்திடலாம்.

எதற்கும்
கூடுதலாய் ஒரு
வருத்தம் தெரிவிக்கிறேன்.
இன்னும் கூட
யாருமென்னை எழுத்தாளனென்று
சொல்லாமல் இருந்தமைக்கு...!

---
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-May-15, 8:12 am)
பார்வை : 197

மேலே