யாரப்பா அது

கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்ததும்
முகநூளில் வள்ளுவன் குறித்து சில வரிகளை பதித்திருந்தேன் .

ஐயா !!
உன்னால் உயர்ந்தது பெருமை
உமது குடிக்கும் அந்த குடிகொண்ட
நாட்டிற்கும் .

உமது கவியை காலங்கள் கடந்தும் முழுதும் உணர முயன்று வருகிறது இவ்வுலகம் .

அத்தகைய உமது வழிவந்த குழந்தைகள் நாங்கள்
உன் போல் உலகம் போற்ற கவி படைக்க முடியாது போனது வருத்தம் என்றால் .

அதை விட கொடிய வருத்தம் உன் போல் அழகாய் சம்மணக்காலிட்டு ஒழுங்காய்
உட்கார கூட முடியவில்லையே ..

முயன்றவர் யாரோ முடியாது என்று உணர்ந்து உன்னையும் இப்படி நிற்க வைத்து விட்டார்களே ...
நடுக்கடலில் .

என்று,

கவியால் காலங்களில் நின்றவர்
கடலில் நிற்கிறார் .

என்ற தலைப்பில் பதித்திருந்தேன் .

அதை பார்த்த நண்பரோ கருத்துகளில் கேட்டார் ..

எப்படி பயணம் ?

பயங்கரம்

ஹா.. ஹா.. என்ன ?

அதை ஏன் கேட்கிற
பயணத்தில் என் பையன் கேட்டான்பாரு ஒரு கேள்வி ஆடிப் போய்டேன் .

அப்படி என்னடா கேட்டான் ?

அப்பா.. அங்க பாருங்க தாடி வச்ச காந்தி தாத்தா ...

அடேய்... அது காந்தி தாத்தா இல்ல டா.

அப்போ யாரப்பா அது ?

திருவள்ளுவர் டா.

உன்னோட பையனுக்கு திருவள்ளுவர் கூட தெரியாதா ?

டேய் .. அவன் மூணு வயசு பையன் டா .. பள்ளிக்கூடம் கூட போகல .

அப்போ.. எப்படி டா அவனுக்கு காந்தி மட்டும் தெரிஞ்சாரு ?

எல்லா ரூபா நோட்டுலையும் தான் அவர் படம் இருக்கே..

உங்க வீட்டுல வள்ளுவர் படம் ஒன்னு கூடவா இல்ல ?

வரும்போது வாங்கிட்டு தான் வந்தேன் .
..........
வீட்டு சுவற்றில் வள்ளுவன் வந்த கதை முடிந்தது ....
டாட் டா .....

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (28-Jun-15, 3:13 am)
பார்வை : 368

மேலே