ஜின்னா

ஜின்னா.............
அண்ணா
உம் படைப்புகள் தேடி வாசித்தேன்
ஒவ்வொன்றும் அருமை

எளிய எடுத்துகாட்டுகள்
குறுகிய கவிதைகள்
புரியவைக்கிறது உம் நினைவுகள்
---------------------------------------------------------
தொடாத உயரத்தில்
தொட்டுகொண்டிருக்கும் உமது கவிதையே
தொட்டில் ஆடிக்கொண்டு தொட நினைக்கும்
உமது ரசிகன் நான்
----------------------------------------------------------------
புதியராய் வந்தால்
அரியதாய் வாழ்த்தும் கவிகளுக்கு மத்தியில்
அரணாய் வந்து வாழ்த்தியவர் நீர்
-----------------------------------------------------------------
விண்ணை முட்டும் உம் கவிதைகள்
மண்ணை பிளந்து
மாணிக்கமாய் மண்ணில் சிதறி
இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்
--------------------------------------------------------------------
எனக்கு பிடித்த வரிகள்
"வயிற்றில் அடித்து கொண்டது
குடை பிடிக்க தெரியாத குருவிகள் "

"சட்டத்தில் ஓட்டைகள் சகஜம்தானே
புல்லாங்குழல் "
-------------------------------------------கவிதை தளத்தில் கடவுள் இருந்தால் அவரும் வாழ்த்திருப்பர்
கவி உலகில் கவித்துவம் உள்ள கண்ணதாசன் நீ என்று -------------------------------------------------------

.................................................பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (5-Jul-15, 11:08 am)
பார்வை : 411

மேலே