இணையும் இரவு

மாயப் புன்னகை..
மந்திர வனப்பு..
மயக்கம் புணரும்..
மத்திம சாமம்..!

இதழ்கள் உதிர்க்கும்..
இனிய மொழிகள்..
இதம் நிறைந்த..
இரவின் இனிமை ..!!

விழிகள் மூடும்..
விரக தாபம்..
விரல்களினூடே..
விழைந்து ஓடும்...!

காதுமடல் பேசும்..
கன்னத்தின் கவிதைகள்..
கண்ணிமை மூடும்..
கழுத்தின்கீழ் முத்தத்தில்..!

பார்வைகள் பார்க்கும்..
கைகள் கோர்க்கும்..
பயத்தின் பன்மை..
பருவம் பேசும்..!!

எழுதியவர் : சுதர்ஷன் (20-Jul-15, 12:16 pm)
சேர்த்தது : சுதர்ஷன்
Tanglish : inaium iravu
பார்வை : 138

மேலே