ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

இல்லை இல்லை
இது என் கண்ணீர் இல்லை .
உள்ளம் உடைத்து உணர்வுகள்
வெடித்ததால்
விழிகளின் வழியே உதிரம்
சொட்டுகின்றது .

யார் நீ என் உறவா .?
என் சாதியா .? என் மதமா .?
ஏன் வலிக்கின்றது எனக்கு .?

ஏனெலில்
நீ மனிதன் .

மதங்கள் உன்னை மலிவாக்கவில்லை
சாதி உன்னை நோக்கவே இல்லை .
இனம் மொழி எதுவும்
உனக்கு இடையூராகவில்லை .

நீ
இளைஞன்
என்பத்தி மூன்று வயதிலும்
எட்டு திசையையும்
எதிர்த்து நின்ற
இளைஞன் .

விஞ்ஞானி
ஆம் நீ
ஞானம் ஊட்டும் மெய் ஞானி .

வரிகள் உறுதியாய் தெரிகின்றது
வலிகள் உள்ளுக்குள் கொல்கின்றது

மறைந்து விட்டாயா நீ.!
பிரிந்து விட்டதா உன் உயிர் .!
கனக்கின்றது மனது
வெடிக்கின்றது இதயம் ..!

(மனங்களை வென்ற மனிதருக்கு என் கண்ணீர் அஞ்சலி .ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் .)

எழுதியவர் : கயல்விழி (28-Jul-15, 8:41 am)
பார்வை : 216

மேலே