கலாமிற்கு அஞ்சலி செலுத்திய ”கூகுள்”
கலாமிற்கு அஞ்சலி செலுத்திய ”கூகுள்”...
-------------------------------------------------------
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமிற்கு உலகின் தலைசிறந்த தேடல் பொறியான கூகுளும் அஞ்சலி செலுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் மேகாலயாவில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு உலகின் பல்வேறு மூலையிலும் உள்ள மாணவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் தலைசிறந்த தேடுபொறி இயந்திரமான கூகுள், தனது இந்திய தேடுபொறி இயந்திரத்தில் "கருப்பு ரிப்பன்" மூலமாக தன்னுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றது.
கூகுளின் முதன்மை பக்கத்தின் கீழாக அந்த கருப்பு ரிப்பன் "டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் சுட்டிக் காட்டுகின்றது.
நன்றி ;நியூ இந்திய நியுஸ்