விருட்சமாய் விழுந்தவரே
தனக்கென அடையாளம் தேடும்
காளையர் கூட்டம் !!!
உரையாற்ற நீங்கள் வந்தால்
இரைதேடும் எறும்பாய்
உங்களை தேடி நாடி வரும்!!!
கனவுகாணச் சொல்லி கொடுத்தீர்
நாட்டை வல்லரசாக்கும் எண்ணத்தை
எங்கள் நெஞ்சில் விதைத்தீர்!!!
உன்னவர் சிலர் உங்களை தூற்றினாலும்,
பாரில் பலர் போற்றும் பண்பாளராய் !!!
பலரை மனிதனாக்கிய மகாத்மாவானீர்!!
" முடிசார்ந்த மன்னரும் ஒருபிடிச்சம்பல் தான்
அதை அறிந்திருந்தும்
மனம் மறுக்கிறது உன் மறைவை"
மாற்றம் தான் மாறாதது -
விதை விழுந்தால் தான் விருட்சம் - அதை மாற்றி,
நீங்கள் எங்கள் உள்ளத்தில்
விருட்சமாக விளுந்துள்ளீர்!!!