நாட்டினை வளர்க்கும் நன்மை இயக்கங்கள் பிறக்கட்டும் - சி எம் ஜேசு

வினை இல்லாத நாடு வேண்டுவோம்
விசைகள் இல்லாத அம்பினை வைத்திருப்போம்

குனமாராட்டம் நிறைந்த நாட்டினில்
ஒரே மனதை உருவாக்கும் இயக்கம் வளர்ப்போம்

இதயங்களை செம்மைப்படுத்தும்
ரணங்கள் இல்லாத மதங்கள் வளர்ப்போம்

உழைக்கும் உண்மை செயல்கள் நிறைந்த
செழிக்கும் எண்ணம் மிகுந்த இயக்கம் காணுவோம்

போராடி உயிர்துறக்கும் போக்கினை விட்டு
புகழாடிபோதிக்கும் திறன் வளர்ப்போம்

மனங்களை கட்டுபடுத்தும் மதங்கள் போல - நம்
இனங்களை கட்டுபடுத்தும் இதயங்கள் வளர்ப்போம்

புதையுண்ட பிணங்களைத் தோண்டாமல் - புவி
நிறைந்திருக்கும் உயிர்களுக்கு வாழ்வைச் சமைப்போம்

கற்றது எதுவென்றாலும் கல்லாதது உலகம் என்றாலும் - நம்மில்
நன்மை நிறைந்திருக்கும் செயல்களைப் படைப்போம்

அறிவார்ந்த செயல்களைப் பின்பற்றும்
ஆதரவற்றோரின் கரங்களை உயர்த்துவோம்

எச்சில் துப்பாத இயக்கங்கள் கொண்டு
ஆச்சு வார்த்தாற்போல நாட்டின் சுத்தத்தை சத்தமாக்குவோம்

அகதிகள் எனும் பெயரை மாற்றி - அவர்கள் நம் நாட்டின்
விருந்தினர்கள் என்றெண்ணி மறு வாழ்வைத் தருவோம்

கடைகள் சூழ்ந்த போதும்
கலகம் இல்லாத வியாபாரத்தை வளர்ப்போம்

வாழ்வதெல்லாம் தீமைகளால் தான் என்றால்
நம்மை மாற்றும் மந்திரத்தை கண்டுணர்வோம்

ஒரே தலைமையைப் பின்பற்றாமல் - நம்
தலைவர்கள் எல்லாம் மந்திரிகளாகும் அரசியல் படைப்போம்

வ ந் தே மா த ரம் என்று சொல்லி
என்றும் நன்மை தேசத்திற்கு எண்ணம் விதைக்கிறேன்

உங்கள் சி.எம் .ஜேசு

எழுதியவர் : சி.எம்.jesu (12-Aug-15, 9:41 pm)
பார்வை : 204

மேலே