விடுதலை யாருக்கு

அப்பாவி மக்கள் அடிமைகளாக வாழும் அவலநிலை இன்றும் மாறவில்லை!
விடுதலை யாருக்கு கிடைத்தது?
மனிதனுக்கா! இல்லை... மண்ணுக்கா!
ஆங்கிலேயர் ஆட்சியில் கூட பாரதமாதா கண்ணீர் வடித்திருக்கமாட்டாள் அன்று;
ஆனால் இங்கு நடக்கும் அக்கிரமங்களை அவள் காணும்பொழுது இன்று!
அதனால்தான் சுதந்திரதினத்தன்று இனிப்பு வழங்குகிறார்களோ!
சமாதானப்படுத்த!!!!!!!!!!!
விடுதலை யாருக்கு கிடைத்தது?
ஏழைக்கா! இல்லை... ஏகாதிபதிக்கா!
இதை அறிந்தும்... அறியாத குடிமகனாய் கூட்டத்தில் நானும் நிற்கின்றேன் மிட்டாய் வாங்க!

எழுதியவர் : கார்த்திக் (15-Aug-15, 1:53 am)
Tanglish : viduthalai yaruku
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே