நினைவு நாள்
காலை கண் விழித்த நொடி முதல்
உன் ஞாபகங்கள்!
உன் நினைவுகள் என் மனதில் அழியா
சுவடாய் பொதிந்துள்ளன!
நீ இல்லா வாழ்க்கை நரகமாய்
உள்ளது அம்மா!
உன்னை பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை!
உன் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் என்னை கொல்கிறது!
இன்றோ உனது நினைவு நாள், ஆனால்
என் மனம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது!
நீ வேண்டும், உன்னுடன் வாழ்ந்த அந்த
பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்!
திரும்பி என்னிடம் வா அன்னையே!!!!!!!!!!