உனக்கும் கண்ணீர்வரும்

காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!

தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!

நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Aug-15, 6:23 am)
பார்வை : 357

மேலே