பஞ்சோபசாரம்

பஞ்சோபசாரம்

பஞ்சேந்திரியங்களால் அனுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்யும் மனோபாவனையில் பிறந்தது தான் பஞ்சோபசாரம் என்ற ஐந்து உபசாரங்கள்.

நாம் தினமும் பூஜை செய்கிறபோது குறைந்தது ஐந்து உபசாரங்கள் செய்யவேண்டும். அவையாவன:

சுவாமியின் விக்ரகத்திற்கு சந்தனமிடுவது.

புஷ்பம் சாற்றி அர்ச்சிப்பது

தூபம் காட்டுவது

தீபாராதனை செய்வது

நைவேத்தியம் செய்வது ஆகியவை பஞ்சோபசாரம் எனப்படும்.

இவற்றில் சந்தனமிடுவது பிரக்ருதி தத்துவம்

புஷ்பம் ஆகாய தத்துவம். தூபம் வாயு தத்துவம். தீபம் அக்னி தத்துவத்தையும் நைவேத்தியம் நீர் தத்துவத்தையும் குறிக்கும்.

எனவே பஞ்சோபசார பூஜையில் பஞ்ச பூதங்களும் அடக்கம். பஞ்சோபசார பூஜையில் பகவான், ஜீவன் மற்றும் இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஒன்றுபடுகின்றன.

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (28-Aug-15, 2:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 137

மேலே