என் இனிய காதலியே

எத்தனையோ இரவுகள்
எனக்காக அழுதிருக்கிறாய்!
எத்தனையோ நாட்கள்
எனக்காக காத்திருநதிருக்கிறாய் !
எத்தனையோ இம்சைகளை
எனக்காக பொறுத்திருக்கிறாய் !
எத்தனையோ கணங்களில்
என் கண்ணீரை துடைத்தெறிந்திருக்கிறாய் !
எத்தனையோ துயரங்களில்
என் துணை நின்றிருக்கிறாய்!
இப்படியான எத்தனை எத்தனையோ முறைகளை
நாம் கடந்து வந்திருந்தும் கூட
இன்று
எவனோ ஓருவன் போல ஏனோ பார்க்கிறாய்
விருப்பமில்லாமல் புண்ணகைக்கிறாய்
விலகி நிற்பதையே விரும்புகிறாய்
ஏனென்றால்
"இதுவும் காதல் தான்" என பிதற்றுகிறாய்
போதும் .!!!! என் அன்பிற்க்குரியவளே .,,!!
உன் போலி முகமூடியை கிழித்தெறிந்துவிடு!!
காதோரம் நாம் பேசிய காதல் மொழிகள் ,
கைகோர்த்து நாம் நடந்த அழகிய நாட்கள் ,
தோள்சாய்ந்த கிடந்த நிமிடங்கள்,
ஊடலுக்குப் பின் பரிமாறிய முத்தங்கள்,
என நீளூம் பட்டியலை
ஓருமுறையேனும் நினைத்துப்பார்
நினைவுகள் என்னும சூரியனை கைக்கொண்டு மறைக்க நினைக்கும்
உன் அதிமேதாவிதனத்தை உணர்ந்துகொள் !
அதுவரையிலும காத்திருப்பேன் ,
காதலுடன்

எழுதியவர் : நவீன் சுபபிரமணியம் (31-Aug-15, 3:16 am)
Tanglish : en iniya kathaliye
பார்வை : 56

மேலே