நம்பிக்கை _ குமரேசன் கிருஷ்ணன்

நம்பிக்கை ...வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...

வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!

தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...

'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...

காயங்கள்
ஆறிவிடும்...
கவலைகள்
ஓடிவிடும்...

கனவுகள்
கூடிவரும்...
காவிரியிலும்
நீர்வரும்...

மாற்றங்கள்
துளிர்விடும் ...
மறைவுகள்
உயிர்பெறும்...

மனித மனம்
என்று
ஒளிபெறும் ...?

தும்பிக்கைதான்
பலம்
யானைக்கு
நமக்கு
நம்பிக்கை ...

நாளைய
உலகினை
வழிநடத்த
வந்தவன்
நீ ...!

நம்பிக்கை...வை

நம்பிக்கையில் தான்
நகருகிறது
வாழ்க்கை ...!
------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (2-Sep-15, 3:00 pm)
பார்வை : 10384

மேலே