கிராமமே சொர்க்கம்
குடிசை வீட்டில்..
மண் தரையில்..
விறகு அடுப்பில்..
மண்ச்சட்டி சமையலில்..
வாழையிலைச் சோற்றில்..
கிணற்று நீச்சலில்..
கயிற்று கட்டிலில்..
தென்னமர காற்றில்..
பனைமர நுங்கில்..
வரப்பு வயலில்..
ஊர்த் திருவிழாவில்..
இருக்கும் சுகமும் மகிழ்வும்
வேறெங்கும் இருந்து விடப்போவதில்லை...!
வாழும் சொர்க்கத்தை
தொலைத்து விட்டு
இறந்த பின்பு அதில்
வாழத் தொழுகின்றோம்...!
-அருண்வேந்தன்