கொண்டாட்டம்

கொண்டாட்டம்.

சுஷ்யா என்றொரு யூத ஞானிஇருந்தார்.அவர் எப்போதும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருப்பார்.யூதக் கோவிலில் அவர் ஆட ஆரம்பித்து விட்டால் டேபிள்,சேர்,எல்லாம் பறக்கும்.எதிர்வரும் ஆட்கள் ஒதுங்கி ஓடி விடுவார்கள்.ஆடும்போது அவருக்கு எதுவும் தெரியாது. ஆட்டத்தில் தன்னையே அவர் மறந்து விடுவார்.இறை நினைப்பு மட்டுமே இருக்கும்.

ஒருநாள் திடீரென சிறுவனாயிருந்த அவருடைய ஒரே மகன் இறந்து விட்டான்.அவன் மீது அவருக்கு அளவு கடந்த பாசம்.அவன் இறந்ததும் அவர் என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள்?கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்த,கல்லறை வரை அவர் ஆடிக் கொண்டே சென்றார்.அவர் கடவுளிடம் சொன்னார்,''தூய்மையான ஆத்மாவான ஒரு குழந்தையை எனக்குப் பரிசாகத் தந்தாய்.இப்போது அந்த ஆத்மாவை மாசு எதுவும் ஏற்படாது தூய்மையாகவே உன்னிடம் நான் திரும்பவும் ஒப்படைக்கிறேன்.சில காலம் இந்தப் பரிசு என்னிடம் இருக்க அனுமதித்தமைக்கு நன்றி..''

மனம் தூய்மையாயிருந்தால் எந்த ஒரு காரணமும் கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்ல முடியும்.இல்லாவிடில் எல்லாவற்றிலும் குறையே கண்டுபிடித்துக் கொண்டிருப்போம்..

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 8:56 pm)
Tanglish : kondaattam
பார்வை : 229

மேலே