என்னைத் தெரிந்து கொள்ள

என்னைத் தெரிந்து கொள்ள

ஞானி நாகார்ஜுனா தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது வழக்கம்.அவர் மீது பக்தி கொண்டிருந்த அந்நாட்டு அரசி அவருக்கு தங்கத்தாலான ஒரு பிச்சைப் பாத்திரத்தை வழங்கினார்.அதன்பின் அதிலேயே அவர் பிச்சை வாங்கி வந்தார்.ஒருநாள் ஒரு திருடன் பாத்திரத்தைப் பார்த்துவிட்டான்.அதை எப்படிடும் திருடி விடுவது என்று எண்ணி அவரைப் பின் தொடர்ந்தான். நாகார்ஜுனாவும் அன்று இரவு ஒரு மடத்தில் தங்கி சாப்பிட்டார்.திருடனைப் பார்த்த அவர் அவனுடைய எண்ணம் அறிந்து அப்பாத்திரத்தை அவன் இருந்த பக்கம் எறிந்தார்.

திருடனால் இதை நம்ப முடியவில்லை.அவர் அவனை தன் பக்கம் வரவழைக்கவே இப்படி செய்தார்.அதேபோல அவனும் அவரிடம் வந்து தங்கப் பாத்திரத்தை அவரிடம் திரும்பக் கொடுத்தான்.அதற்கு அவர் அதை அவனுக்கு ஏற்கனவே பரிசாக அளித்து விட்டதாகக் கூறினார்.திருடன் நம்ப முடியாமல்,''இதனுடைய விலை என்ன தெரியுமா?;;என்று கேட்டான்.அதற்கு அவர் சொன்னார்,''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால் வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,''உடனே திருடன்,''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது?''என்று கேட்டான்.

.அதற்கு அவர்,''திருடும்போது சுய உணர்வோடு ,எச்சரிக்கையோடு,கவனத்தோடு இரு,''
என்றார்.அதன்பின் திருடன் இரண்டு முறை திருட முயற்சி செய்தான்.ஆனால் அவன் ஞானி சொன்னதுபோல சுய உணர்வோடு இருந்தபோது செல்வம் எதையும் திருட அவனுக்கு விருப்பம் வரவில்லை.கடைசியாக வெறுங்கையோடு நாகார்ஜுனாவிடம் வந்தான்.அவருடைய சீடனான்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 9:03 pm)
பார்வை : 313

மேலே