பூவே

பூவே, உன் தாய் செடியிடம்
மொட்டாக வருவதற்கோ ஆறாண்டுகாலம் !
அந்த மொட்டு பூவாக மாறியதோ
அதிகாலை ஆறு மணி ஆறுநொடியில் !
பூவாக இருத்த நீ கருகியதோ
அடுத்த ஆறு மணி நேரத்தில் !
ஏனடி நீ
உன் தாய் மடியில் தவழ வேண்டியநீ
பூமிதாயின்மடியைஅடைந்ததேனோ !
உன் தாய் கண் விழிக்கும் முன்
நீ கண் முடியதேனோ !
நீ உருவாகும் போது உன்னை
உன் தாய் வேண்டாம் என்று கூறியது
உன் கரு வரை கேட்டதோ ! அல்லது
உன் தந்தை உன்னை ஆணாக இருக்கவேண்டும
என்று நினைத்தது உன் காதுக்கு எட்டியதோ !
உன் அழுகுரலை கேட்டு சந்தோசம் அடைந்த
எங்கள் அனைவரையும் கதற வைத்தையாடி!
உன் தாய்கும், உன் அக்காவிற்கும், பாட்டிக்கும்
ஆறுதல் சொல்ல வேண்டிய நான் முடியாமல்
அவர்களை கூற வைத்தையடி !
இந்த நவீன யுகத்தில் அந்த அன்னையின்
மருத்துவத்தில் உன்னை காப்பாற்ற முடியாமல்
போனது ஏனோ !
இப்பிறவில் நீ எங்கு பிறந்திருந்தாலும்
உன்னை நான் மறவேனடி !
இது போன்று இனி யாருக்கும்
இந்த நிகழ்வு வரக்கூடாதடி !
பூவே நீ மீண்டும் கொடியில்
பூத்து மலர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !

எழுதியவர் : சேது (28-May-11, 11:14 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : poove
பார்வை : 711

மேலே