பலாவின் சுவை
அலையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...
வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....
பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...
குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...
இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...
பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?
-'பரிவை' சே.குமார்.