அசோகர் மரம் வளத்தார்

"ஏம்ப்பா.....இங்க இருந்து ரெண்டே கிலோ மீட்டர்தானே.......நடக்கக்கூடாதா, அதுக்குப்போயி காரா.....நானெல்லாம் உன் வயசுல எவ்வளவு தூரம் நடந்திருப்பேன்?"

"அட போங்கப்பா......நீங்க நடந்தப்பெல்லாம் மரங்க நிறைய இருந்துருக்கும்? நிழல்ல நடந்துருப்பீங்க........."

நியாயமான கேள்விதானே........நான் நிழலின் சுகத்தை அனுபவித்தவன். வெயிலின் கொடுமையை என் மகன் அனுபவிப்பதா?

இந்த மரமண்டைக்கு இது கூடத்தெரியவில்லை.

சரி.....மண்டை இங்க இருக்கு. நான் இளைப்பாறிய மரங்கள், அசோகர் மரம் வளத்தார்னு நான் புத்தகத்துல படிச்ச மரமெல்லாம் எங்க இருக்கு?

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஞானசேகர (2-Oct-15, 12:23 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

மேலே