நான் கசாப்புக்காரனா’

ஈராக்கில் நிலைமை தொடர்ந்து க்ஷீணித்து வருகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. இத்தனை துன்பங்களுக்குப் பிறகு, பல லட்சம் பேரின் சாவுக்குப் பிறகு கிட்டிய ஒரு ‘ஜனநாயக’ அரசை, ஒரு நாட்டு மக்கள் எப்படி எல்லாம் வீணடித்து மறுபடி சாக்காடாக நாட்டை மாற்ற முனைந்தார்கள் என்பது அத்தனை சுலபமாக விளக்க முடியாத ஒரு விஷயம்.

ஜெர்மன் பத்திரிகை டெர் ஷ்பீகல் இந்த விஷயத்தைத் தொடர்ந்து அணுகி விளக்கங்கள் காண முயன்று வருகிறது. ஒரு சமீபத்துக் கட்டுரையில் ஓரளவு விளக்கங்களோடு, ஈராக்கின் இன்றைய சிதிலங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தின் ஒரு திட்டக்குழு உறுப்பினரைப் பேட்டி கண்டிருக்கிறது. இ.ஸ் இயக்கத்தின் திட்டமே ஷியா முஸ்லிம்களைப் பூண்டோடு அழித்து, உலகெங்கும் சுன்னி முஸ்லிம்களை மட்டுமே வாழ அனுமதிப்பது என்பதுதான். என்னென்னவோ தக்கியா எல்லாம் செய்து இந்தியருக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த எளிய உண்மை தெரிய விடாமல் இந்திய முற்போக்குகளும், திராவிடிய விஷங்களும், தமிழக முஸ்லிம் தீவிர வாதக் குழுக்களும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் நிஜம் என்னவோ இந்தக் கொலைக்கும்பலின் தொடர்ந்த இயக்கத்திலிருந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அதெல்லாம் பொய்ப் பிரச்சாரம் எனறும், யூதர்களின் உலக ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஊடகத்தின் பொய்கள் என்றும் தமிழகத்து எதிர்ப் பிரச்சாரம் தமிழகத்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவத் தொடர்ந்து முயல்கிறது. ஆனால் நிஜம் வெளிவந்து பொய்ப்பிரச்சாரத்தை ஓரம் கட்டுகிறது.

சமீபத்தில் பல நூறு வடக்கிந்திய மௌல்விகள் ஒரு ஃபத்வாவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த ஃபத்வா சொல்வது- இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கம் இஸ்லாத்தின் அடிப்படைகளை அழிக்க முயலும் இயக்கம் என்பது. இதுவும் ஒரு தக்கியா முயற்சியா என்பதை நாம் உடனடியாக அடையாளம் காண முடியாது. பொறுத்திருந்தால் அதுவும் புலனாகும். ஆனால் இத்தனை நூறு மௌல்விகள் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள், இஸ்லாம் என்ற பெயரை வைத்துக் கொண்டு சில பத்தாயிரம் பேர் பல்லாயிரக் கணக்கில் மேற்காசிய மக்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்பது அந்த உண்மை.

ஆனால் இதே மாதிரிதானே பல லட்சம் மக்களை அரேபியக் கொள்ளைக் கும்பல்கள் பண்டை இந்தியாவில் கொன்றார்கள் என்று இந்துக்கள் மட்டும் கேட்டு விடக் கூடாது? இந்துக்களை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொன்றழிக்கலாம், அதற்கு செமிதிய மதத்தினருக்குத் தனி உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. கேரள மார்க்சியருக்கும், வங்க முற்போக்குகளுக்கும் இப்படி தமக்கு உரிமை உண்டு என்பது பல பத்தாண்டுகளாகத் தெரிந்த உண்மைதான். இந்துக்களுக்கு மட்டும்தான் தாம் வேட்டையாடப்படும் வன விலங்குகள் போல என்பது தெரிவதில்லை.

ஜெர்மன் பத்திரிகையின் இந்தக் கட்டுரையில் இஸ்லாமிக் ஸ்டேட் கொலைக் கும்பலின் வெடிகுண்டு சதித்திட்டங்களை வெற்றிகரமாக ஈராக்கில் பல இடங்களில் நடத்திய அபு அப்துல்லா என்ற நபரின் பேட்டி வெளியாகி இருக்கிறது. இந்த பேட்டியில் தெளிவாவது- உணர்ச்சி வசப்பட்டு பலரைக் கொல்லும் மனப்பிறழ்வெல்லாம் இல்லாத நபர் இவன். இவன் தெளிவாகச் சொல்கிறான், ஷியாக்களை அழிப்பதுதான் திட்டம், அதைச் செய்வதில் இவனுக்கு ஒரு குற்ற உணர்வும் இல்லை என்கிறான்.

வஹ்ஹாபியத்தின் 50 ஆண்டு கால விஷ வித்து உலகெங்கும் பரவி இருப்பதற்கு சௌதி அரேபியாவின் தொடர்ந்த பிரச்சாரம் ஒரு காரணம் என்று உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்தக் கொலைக் கும்பலின் இருப்பும், இயக்கமும் அப்படி ஒரு கடும் குறுகல் கொண்ட கோட்பாட்டின் விளைவுகள் என்பதில் நாம் ஐயம் கொள்ளத் தேவை இல்லை என்று நிறுவுகின்றன. இந்தியாவில் இந்துக்களை அழிப்பதும் இந்த இயத்தின் தொலை நோக்குத் திட்டம் என்பதும் நமக்கு இப்போது தெளிவாகி இருக்கும். இந்த பேட்டியைப் படித்து என்னவொரு கொடுமை எத்தனை ‘தெளிவான’ புத்தியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொல்வனம (4-Oct-15, 11:30 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 146

மேலே