தொளி

ஆசிரியர் : மாணவ செல்வங்களே ...! வருங்கால தூண்களே ..,

மாணவன் : நா தூங்கிட்டு தான் இருக்கேன் சார் .

ஆசிரியர் : நா உன்ன தூங்க சொல்லல ....டேய் ..,டேய் ....
இப்படி தூங்கினா எப்படி படிப்படா..
தொளிச்சி பூடுவே தொளிச்சி ...

மாணவன் :சார்.., எங்க அம்மா உங்களை கூப்பிட்டாங்க ..,

ஆசிரியர் : என்னடா ..?

மாணவன் : நேத்து எங்க அப்பா வாசல்ல ஏண்டி தண்ணி தொளிக்கலன்னு ..,
அம்மாவை அடிச்சாங்க ..,அப்போ , நா சொன்னேன் .
அம்மா அழாத எங்க சார் நல்லா தொளிப்பென்னாரு ..,
அப்படி சொன்னேன் .அதான் சார் ..,

ஆசிரியர் : டேய் ..,அப்படியா சொன்ன .., நா தண்ணி தொளிப்பென்னு சொல்லலடா ..,

மாணவன் : அப்போ ..!தேங்கா தொளிப்பிங்களா சார் .

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (5-Oct-15, 4:08 pm)
பார்வை : 184

மேலே