அவள் நினைவில்

கண்ணிமையால் கதை பேசி
கை விரலால் இடம்,நேரம் சொல்லி
ஆசான் கற்பித்த வகுப்பறை பாடங்கள் மறக்க
ஆசையாய் உன்னை பார்த்து ரசித்த பொழுதுகள் மட்டும்
இன்னும் என்னுள் இன்னமும் என்னை காதலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது...

உன்னை எனக்குள் கவிகளால் எழுதி
கற்பனையில் செதுக்கி
தனிமையை இனிமையாய் ஆக்க
தலையணைக்கு கிடைத்த முத்தங்களால் மட்டும்
என் தலையணை உணர்ந்து கொள்ளும் உன்மீதுள்ள என்பாசத்தின் அளவை..

இரவு வெளியில் வானம் பார்த்துறங்கி
புல்களோடு பேசிப் பேசி
நிலா வெளிச்சம் நட்சத்திர வெளிச்சத்தை மறைப்பது போல்
உன் நினைவால் நான் மறைந்து போகிறேன்...

காலம் கிட்டும் வரை
பசியில் குறைவில்லை
காத்திருக்கிறேன் உன் மடியினில் தஞ்சம் புகுற.....

எழுதியவர் : பர்ஷான் (8-Oct-15, 5:33 pm)
Tanglish : aval ninaivil
பார்வை : 226

மேலே