சொல்லாமலே
சொல்லாமல் வருவதுதான் காதல் என்றேன்
சொல்லாமல் விட்டாலது சோகம் என்றாய்.
நில்லாமல் ஓடிடும் நீயோர் நிலவு என்றேன்
பொல்லாத கற்பனையைக் கைவிடு என்றாய்
கைவிட மாட்டேன் காதலியே என்றேன்
கையடித்துச் செய் கலியாணம் என்றாய்
இல்லாமல் இருப்பதுதான் அழகு என்றேன்
இல்லாமல் என்றால் ஆடையா என்றாய்
பொல்லாத ஆண்மகன் நானல்ல என்றேன்
சல்லாபம் சொல்லாமல் தெரியும் என்றாய்.