அடைய முடியும்

ஒன்றைஅடைய முடியும் என்று மனிதனுடைய மனம் எண்ணுமேயானால், எண்ணி அதை அடைய முடியும் என்று நம்புவோமேயானால் அவனால் அதைக் கண்டிப்பாக அடைய முடியும். தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கல்
உங்கள் உள்மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்!
தீவிர நம்பிக்கையின் சக்திதான் எவ்வளவு? அதனால், உங்கள் பலம் பன்மடங்காக பெருகும்.

இதோ ஓர் உதாரணம்:

மூன்று பேருக்கு ஒரு பரீட்சை வைக்கப்பட்டது. ஒரு பொருளைக் கையால் பற்றினால் அந்தப் பிடியில் பலம் எவ்வளவு இருக்கும் என்று கச்சிதமாக கருவி மூலம் கணக்கிடப்பட்டது.

அந்த மூவரில் ஒவ்வொருவருக்கும் 101 கிலோ பிடி சக்தி இருப்பது தெரிந்தது.

பிறகு ஒரு வசிய நிபுணர் வரவழைக்கப்பட்டார். அவர்களுடைய உள்மனத்தில், ‘நீங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிaர்கள்... மிகப் பலவீனமாக... மிகப் பலவீனமாக இருக்கிaர்கள்... உங்கள் பிடியில் சக்தியே இல்லை,” என்ற எண்ணம் ஏற்றப்பட்டது. பிறகு அதே பரீட்சை வைக்கப்பட்டது.

இப்போது அவர்களுடைய சராசரி பிடிசக்தி 29 கிலோவே இருந்தது! வசியத்துக்கு உள்ளாகித் தாங்கள் மிக பலவீனமாய் இருப்பதாக அவர்கள் நம்பிய காரணத்தால் உண்மையிலேயே மூன்றில் இரண்டு பங்கு பலத்தை இழந்துவிட்டார்கள்.

பிறகு வசியத்துக்கு உள்ளாகியிருக்கும் போது, ‘நீங்கள் மிகுந்த பலசாலிகள். நீங்கள் அதிபலசாலிகள்... இரும்புப் பிடி கொண்டவர்கள்...” என்பது போன்ற எண்ணங்கள் அவர்களது உள் மனத்துக்கு ஏற்றப்பட்டன.

அதே பரீட்சை மறுபடி வைக்கப்பட்டது. வசியத்துக்கு உள்ளாகித் தாங்கள் அதிபலசாலிகள் என்று அவர்கள் நம்பிய காரணத்தால் இம்முறை அவர்களது சராசரி பிடிசக்தி 142 கிலோவாக இருந்தது. நம்பிக்கையின் விளைவாக அவர்களின் பிடிசக்தி 40 சதவிகிதம் கூடிவிட்டது!

தாங்கள் பலவீனர்கள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு இருந்த பிடி சக்தியின் வலு, தாங்கள் மிகுந்த பலசாலிகள் என்ற நம்பிக்கையோடு செயல்பட்ட போது ஐந்து மடங்கு அதிகமாயிற்று.

நம்பிக்கையின் சக்திக்கு உடல் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட வியக்கத்தக்க சான்று இது!

தீவிர நம்பிக்கையின் விளைவாக உடல் வலுவே ஐந்து மடங்கு அதிகரிக்க முடியும் என்றால், தீவிர நம்பிக்கையின் விளைவாக உங்களுடைய மொத்த சக்தி எத்தனை மடங்கு பெருகும் என்று எண்ணிப் பாருங்கள்.

நீங்கள் நினைத்ததை அடைய முடியும் என்று நீங்கள் தீவிரமாக நம்பும் போது உங்களுடைய மொத்த சக்தி எவ்வளவு தூரம் அதிகரிக்கும் என்று அளவிடக்கூடிய மீட்டரோ கருவியோ கிடையாது. ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற்ற ஒவ்வொருவரும் தாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்ற தீவிர நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்கள் என்பதே இதற்குச் சாட்சி. தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று எந்த அளவுக்குத் தீவிரமாக நம்பினார்களோ அந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது-

தீவிர நம்பிக்கையின் சக்தி எத்தனை பேருடைய வாழ்க்கையில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இந்தப் புத்தகத்தில் பல்வேறு அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டு உள்ளது. தாங்கள் எதை அடைய விரும்பினார்களோ அதை நிச்சயம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையின் நேரடி விளைவாக எத்தனையோ ஆண்களும், பெண்களும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அத்தனை சம்பவங்களையும் எழுதப் புகுந்தால் நூல் நிலையங்களில் இடம்கொள்ளாது.

ஆகவே, தீவிர நம்பிக்கை கொள்ளுங்கள்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் எவ்வளவு நம்பிக்கையோடு தங்களிடம் உள்ள தானியங்களை எல்லாம் பூமியில் விதைக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். பல மூட்டை தானியங்கள் தீரும் வரை விதைத்து விடுகிறார்கள். எதையுமே வைத்துக்கொள்வதில்லை.

எதுவுமே மிச்சமில்லை என்று சொல்ல முடியாது. ஒன்றை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் - நம்பிக்கை. அந்த விதைகள் வேர் பிடித்து வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை. தானியத்திலிருந்து தானியம் முளைக்கும், அமோக விளைச்சல் கிடைக்கும். எல்லோரும் பசியாறலாம் என்ற நம்பிக்கை.

விதைத்தால்தான் அறுவடை செய்யாம். இதில் அடங்கியுள்ள படிப்பினை வாழ்க்கையின் எல்லா ஜீவாதாரமான அம்சங்களுக்கும் பொருந்தும்.

இப்போதைக்கு அதை ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயிகளிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய வேறு விஷயங்களைப் பார்ப்போம்.

நீங்கள் எதை விதைக்கிaர்களோ அதைத்தான் அறுவடை செய்வீர்கள்.

இந்த மகத்தான உண்மை விவசாயத்துக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது இல்லை. உங்கள் உள்மனத்தில் நீங்கள் விதைக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருந்தும்.

உங்கள் உள்மனத்தில் உங்களுக்குத் தோல்விதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தீர்களானால் நீங்கள் தோல்வியைத்தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கும் – தினை விதைத்தவன் தினை அறுப்பது போல. கோதுமையை விதைத்த ஒரு விவசாயி கரும்பு விளையும் என்று எதிர்பார்க்கலாமா? இயற்கை விதியின்படி எதை விதைக்கிறானோ அதை மட்டும்தான் அவன் அறுவடை செய்ய இயலும்.

கோதுமை விதைத்தால் கோதுமை விளைவது நிச்சயம். அதுபோல உங்கள் உள்மனத்தில் உங்கள் ஆரோக்கியம் குன்றும் என்றும் நீங்கள் மன நோயாளி ஆவீர்கள் என்று ஒரு நம்பிக்கையை விதைத்தீர்களேயானால் கண்டிப்பாக அதை அறுவடை செய்துதானாக வேண்டும்.

மகிழ்ச்சி, அன்பு, உடல்நலம், செல்வம், வெற்றி, பிராபல்யம், புகழ் எவற்றையெல்லாம் அடைய வேண்டும் என்று விரும்புகிaர்களோ அவையெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் என்ற தீவிர நம்பிக்கையை உங்கள் உள்மனத்தில் விதையுங்கள்.

எதனாலும் இம்மியும் மாற்ற முடியாத இயற்கை விதியின்படி மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், செல்வம், வெற்றி, பிரபல்யம், புகழ் வேறு எதை நீங்கள் விரும்புகிaர்களோ அவற்றை ஏராளமாக அடைவீர்கள். ஏனெனில் அவைதான் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் பொருள்களாக உங்கள் உள்மனத்தில் தீவிர நம்பிக்கையுடன் விதைக்கப்பட்டன.

நீங்கள் எதை அடைய முடியும் என்று தீவிர நம்பிக்கை வைக்கிaர்களோ அதை எப்படியும் அடைந்து விடுவீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? பிரபஞ்சமெங்கிலும் நடைமுறையில் உள்ள இயற்கை விதியே ஆதாரம்: குறிப்பிட்ட ஒரு பொருளை அடைய முடியும், அல்லது குறிப்பிட்ட சாதனை செய்ய முடியும் என்ற தீவிர நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதை அடைவதற்குத் தேவையான எல்லாத் தகுதிகளும் உங்களிடம் ஏற்கெனவே உள்ளன என்றோ, அந்தத் தகுதிகளெல்லாம் உரிய நேரத்தில் தானே உங்களை வந்தடையும் என்றோ இயற்கை உங்களுக்குத் &>ரிவிக்கும் செய்திதான் அந்தத் தீவிர நம்பிக்கை.

ஒன்றைஅடைய முடியும் என்று மனிதனுடைய மனம் எண்ணுமேயானால், எண்ணி அதை அடைய முடியும் என்று நம்புவோமேயானால் அவனால் அதைக் கண்டிப்பாக அடைய முடியும்.

தீவிர நம்பிக்கையின் அடிப்படையில் எழும் உற்சாகத்தையும் விடாமுயற்சியையும் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

எனக்கு மாஜிக்கில் நம்பிக்கை இல்லை. இயற்கை விதியில் நம்பிக்கை உண்டு. தீவிர நம்பிக்கையில் மாஜிக் போன்றதொரு சக்தி இருக்கிறது- ஒரு காரியத்தை உங்களால் செய்து முடிக்கமுடியும் என்ற தீவிர நம்பிக்கை இருக்குமேயானால் எப்படியாவது அதைச் செய்கின்ற அசாதாரண சக்தியை அது வரவழைத்துக் கொடுத்துவிடும்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு மந்திரக் கரம் தடைகளை எல்லாம் நீக்கி, உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்து, தேவைப்படுகின்ற உதவியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்து, நீங்கள் எதை அடைய முடியும் என்று தீவிரமாக நம்புகிaர்களோ அதை அடைவதற்கான வழிகளை விவரிக்க முடியாத முறையில் காண்பிக்கும்.

எனக்கு மாஜிக்கில் நம்பிக்கை இல்லை. ஆயினும் தீவிர நம்பிக்கை இருக்குமிடத்தில் அசாதாரணமான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நிகழ்கின்றன என்று அடித்துக் கூறுவேன்.

அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எல்லாம் அறிவுபூர்வமான சான்றுகள். ஆம். எனது தீவிர நம்பிக்கையின் விளைவாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவை.

தீவிர நம்பிக்கை என்பது மாஜிக்கே அல்ல. மின்சாரத்தைப் போல் இயற்கை விதியின் ஒரு பகுதியாகும். பிற்காலத்தில் ஒருவேளை தீவிர நம்பிக்கை எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டு பிடித்து விளக்கக் கூடிய விஞ்ஞானிகள் பிறக்கக் கூடும்.

இப்போதைக்கு மின்சார சக்தியை ஏற்றுக்கொள்வது போலத் தீவிர நம்பிக்கையின் சக்தியையும் ஏற்றுக்கொள்வோம். மின்சாரத்தைப் பற்றிய எல்லா உண்மைகளும் நமக்குத் தெரியாது. ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து வைத்திருக்கிறோம். நமது நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் அதை பயன்படுத்தவும் செய்கிறோம்.

நமது உள்மனத்தின் மூலம் வேலை செய்து பிரமிக்கத்தக்க விளைவுகளைத் தீவிர நம்பிக்கையானது எப்படி ஏற்படுத்துகிறது என்று நமக்குச் சரியாகப் புரியவில்லை.

ஆனால் மின்சாரத்தை உபயோகிப்பது போல, அபார சக்தியை எப்படி உபயோகிப்பது என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். மின்சாரத்தை உபயோகிப்பது போல் தீவிர நம்பிக்கையின் சக்தியையும் உபயோகிப்போம். சொந்த நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் உபயோகிப்போம்.

தீவிர நம்பிக்கையின் சக்தி நிரூபிக்கும் சில உதாரணங்களை ஆராய்வோம்.

ஓட்டப் பந்தயச் சரித்திரத்தில் எவருமே நாலு நிமிடத்தில் ஒரு மைல் தூரம் ஓடியதில்லை. ஆகவே யாராலும் ஓட முடியாது என்று நம்பப்பட்டது. அந்த நம்பிக்கை மிகத் தீவிரமாக இருந்த காரணத்தால் எவராலும் ஓட முடியவில்லை.

திடீரென்று ஒருநாள் உலகமே பிரமிக்கும் வகையில் ஓர் ஓட்டப் பந்தய வீரர் நாலே நிமிடத்தில் ஒரு மைல் ஓடிக்காட்டினார். எல்லோருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. நாலு நிமிடத்திலோ, அதற்குள்ளாகவோ ஒரு மைல் ஓடலாம் என்று திடீரென்று எல்லோரும் நம்பினார்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு சிறந்த ஓட்டக்காரரும் ஒருமைலை நாலு நிமிடத்துக்கு குறைவாகக் கடந்து விடுகின்றார். நம்பிக்கைதான் காரணம்.

எல்லா விளையாட்டுச் சாதனை விஷயத்திலும் இப்படியேதான் நடந்திருக்கிறது. ஒருவர் சாதனை புரிவார். அதைத் தொடர்ந்து அது பல வருடங்களுக்கு யாராலும் மிஞ்சப்படாமல் அப்படியே நிற்கும். மனித சக்தியால் அதிகபட்சம் என்ன சாதிகக் முடியுமோ அதை அந்த மனிதர் சாதித்துவிட்டார் என்று ஒவ்வொருவரும் முழு மனத்துடன் நம்பிக்கொண்டிருப்பார்கள்.

உடைக்க முடியாது என்று கருதப்பட்டு வந்த அந்தச் சாதனையைத் திடீரென்று யாரேனும் ஒருவர் உடைத்துவிடுவார். அதை உடைப்பது சாத்தியம் தான் என்று ஒவ்வொருவரும் நம்புவார்கள். உடைக்க முடியாது என்று கருதப்பட்ட பழைய சாதனை சொல்லி வைத்தாற்போல் பலரால் முறியடிக்கப்பட்டு மூலையில் தூக்கி எறியப்படும்.

நம்பிக்கையின் சக்தி எங்கெங்கும் செயல்படுகிறதோ அங்கெல்லாம் இப்படி நடப்பதைக் காணலாம். விண்வெளி சாதனைகளைப் பாருங்கள். பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் விண்வெளியில் விண்கலங்களைச் செலுத்துவது என்பது கடினமான காரியமென்றும் அப்படி ஒருகால் செலுத்துவதில் வெற்றி பெற்றாலும் அதற்கு வெகு காலம் பிடிக்கும் என்றும் கருதப்பட்டது.

திடீரென்று ஒருநாள் செய்தி வந்தது. உலகமே அசந்து போயிற்று. முதலாவது ஸ்புட்னிக்கை ரஷ்யர்கள் விண்வெளியில் செலுத்தியிருக்கிறார்கள். அது வெற்றிகரமாக உலகைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு நமக்கு உண்மையாகவே நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையால் தூண்டப்பட்டவர்களாய் உடனே நமது சொந்த விண்கலங்களை உற்பத்தி செய்யவும் உலகை வலம் வரும் பொருட்டு விண்வெளியில் செலுத்தவும் தொடங்கினோம்.... பிறகு சந்திரனில் இறங்கினோம்... பிறகு விண்வெளியின் அகல ஆழத்தையும் மர்மங்களையும் ஆராயப் புகுந்தோம்.

ஆக, அது மனிதனால் சாத்தியம் என்பதை நாம் அறிந்துகொண்ட பிறகு விண்வெளி ஆராய்ச்சியின் புது சகாப்தம் ஆரம்பமாயிற்று. அது உள்ளபடி சாதிக்கப்பட்ட பிறகு விண்வெளி ஆராய்ச்சி பிரம்மாண்டமான அளவில் வேகம் கண்டது. நடக்கவே முடியாது என்று இல்லாவிட்டாலும் வெகு காலம் பிடிக்கும் என்று முன்னர் நாம் நினைத்திருந்த சாதனைகள் இப்போது நம்மால் மளமளவென்று செய்து முடிக்கப்பட்டன.

இந்த மாறுதலுக்கு என்ன காரணம்? நடக்க முடியாது என்று நினைத்திருந்த காரியங்கள், இப்பொழுது திடீரென்று எப்படிச் சாத்தியமாயிற்று? நம்மால் முடியும் என்று நாம் தீவிரமாக நம்பியதே காரணம்.

பங்கு மார்க்கெட்டைப் பாருங்கள். விலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்பிக்கையின் சக்திக்குச் சான்று கூறுவதைக் காண்பீர்கள். ஒரு நிறுவனத்தின் ஷேர்கள் ஒரே நாளில் கிடுகிடுவென்று உயர்வதையோ மடேரேன்று விழுவதையோ பார்க்கலாம். இந்த ஏற்ற இறக்கத்தினால் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் பல கோடி ரூபாய் அளவுக்குப் பாதிக்கப்படுகின்றன. ஏன்?

அந்தக் கம்பனியின் ஷேர்கள் ஏறும் அல்லது இறங்கும் என்று பலர் நம்புகிறார்கள். சில சமயம் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்த நம்பிக்கை மட்டுமே காரணமாக அமைந்துவிடுவது உண்டு. பங்குகளின் அசல் மதிப்பில் மாறுதல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிறுவனத்தின் வரவு செலவு, அன்றாட வருமாணம், அதன் சொத்துக்கள், பற்று வழி - இப்படியாக அதன் அசல் மதிப்புக்குக் காரணமான அம்சங்கள் அந்த ஒரு நாளில் எந்தவிதமான மாறுதலும் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், விலை இறங்கப் போகிறது அல்லது ஏறப் போகிறது என்ற நம்பிக்கை பரவிவிட்டால், ஒரே நாளில் அதன் பங்குகளின் மதிப்பு பல இலட்ச ரூபாய் குறையலாம், கூடலாம். மாறுதல் ஏற்பட்டது மக்களுடைய நம்பிக்கையில் மட்டுமே.

நம்பிக்கையின் சக்தி மகத்தானது. எல்லாப் பங்குகளின் மொத்த மதிப்பும் ஒரே நாளில்பல கோடி ரூபாய் அளவுக்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அது காரணமாக இருப்பது உண்டு. அடுத்த நாளே விலை இறங்கிய பங்குகள் மீண்டும் ஏறிய பங்குகள் இறங்கக் கூடும். மாறியது நம்பிக்கை மட்டுமே என்பதற்கு இது சான்று.

எழுதியவர் : உங்கள் நண்பர் மை சூ பா (10-Oct-15, 5:59 am)
Tanglish : ataiya mudiyum
பார்வை : 216

சிறந்த கட்டுரைகள்

மேலே