ஒளிரும் தமிழே
செந்தமிழ்ப் பாட்டு கேட்டால்
***செவியொடு குளிரு முள்ளம் !
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம்
***செம்மையாய்ப் பொங்கிப் பாயும் !
சந்தமும் கொஞ்சிக் கூட
***சந்தன மணமும் தோற்கும் !
சுந்தரத் தமிழே என்றும்
***சொக்கிட வைக்கும் தேனே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா + தேமா )