வார்த்தை பூக்கள் வாழ்த்து பாக்கள்

அகவை எழுபது - இன்று
உனக்கு அகவை எழுபது
உவகை தெரியுது -உன்
முகத்தில் உவகை தெரியுது !

வாழ்க்கை அரியது -அதில்
வாலிபம் சிறியது
முதுமை நெடியது -அதில்
பொறுமை பெரியது
புரிதல் சிறந்தது !

இன்பம் துன்பம் இரண்டும்
சமமென எண்ணும் எண்ணம்
வியப்புக்குரியது ; அதுவே
எம்மை உன்பால் ஈர்க்குது !

நீ ! ஊர்க்குருவி
உனக்குதவி உன் மனவுறுதி
பிறர்தழுவி அவர் துயர்கழுவி
நீ செய்யும் சிறு உதவி
பேரருவி !நீ வளர்ந்த குழவி !

குணத்தால் எங்களை வழி
நடத்தும் நல்ல கருவி
உன்பாதம் தழுவி நடந்தால்
பயன்பெரும் இப்பிறவி ...

சொந்தமும் பந்தமும் பற்றைவிட்டு
பற்றிடும் உன்னை முற்றிலும்
சுற்றமும் நட்பும் உன்னிடம்
கற்றிடும் பெற்றிடும் பெருவெற்றிகள் !

அன்புமழை பொழியும் மன்னனே..
பண்புநிறைந்த சுப்பு அண்ணனே ..
ஆனந்தம் மலரட்டும் மலரட்டும்
ஆயுள் வளரட்டும் வளரட்டும்

உலகாள்பவன் அலற்மேலவன்
நமையாள்பவன் உமையாள்பவன்
என்றும் உன்னோடு
இருக்கட்டும் இருக்கட்டும்
அவன் ஆசிர்வாதங்கள்
பெருகட்டும் பெருகட்டும் ..


நண்பர் ஒருவரின் எழுபதாம் பிறந்தநாளில் அவருக்காக எழதிய வாழ்த்து பூக்கள் .

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (10-Oct-15, 12:11 pm)
பார்வை : 122

மேலே