இருப்பிடச்சான்றிதழ் பெறுவது எப்படி

நம்மில் பலர் இருப்பிடச்சான்றிதழுக்கும் பிறப்பிடச் சான்றிதழுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குலம்பிக்கொள்கிறோம். இருப்பிடச் சான்றிதழ் என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதை காட்டும் சான்றிதழ் ஆகும்.

ஆனால் பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு பிறந்தார் அவர் பிறக்கும்போது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற தகவல்களை தரும் சான்றிதழ் ஆகும். இவை இரண்டிற்குமே ஒருவர் விண்ணப்பிக்கும்போது எங்கு வசிக்கிறாரோ அந்தப் பகுதி வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணை மூலமாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின் மனுதாரருக்கு மேற்படிச் சான்றிதழை வழங்குவார்.

பொதுவாக இருப்பிடசான்றிதழ் என்பது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தேவையற்றது. ஆனால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான சான்றிதழ் வாங்கும்போது இருப்பிட சான்றிதழையும் வாங்குகின்றனர்.

குடும்ப அட்டையே ஒரு இருப்பிட சான்றிதழ் தான். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேண்டுமென்றால் தனியாக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்க்கு விண்ணப்பிக்கும்போது மனுவின் கோரிக்கைக்கு சான்றாக வழக்கமாக மற்ற சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும்போது அளிக்கும் சான்றுகளைப்போலவே தங்கள் பகுதிப் பொதுமக்கள் பத்துப் பேருடைய வாக்குமூலங்களை இணைக்கலாம்.

எழுதியவர் : செல்வமணி - தகவல் திரட்டி (21-Oct-15, 1:08 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 165

மேலே