தியாக வீரத்திருமகள் குயிலி
வரலாற்று துளிகள் .. தெரியாத உண்மைகள்
ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலு நாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது...
அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்து..
அப்போது சட்டென ஒரு உருவம் எரி நெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது..
அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது...
ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது.. அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது...
ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் " தியாக வீரத்திருமகள் குயிலி "