ஜென் கதைதத்துவம்

ஜென் கதைதத்துவம்
-----------------
நாட்டை ஆள்வதற்கு வீரத்திலும், தீறத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த விளங்கினால் போதுமா.. போதாது என்கிறது ஜென் கதை ஒன்று.

அதில்,

raja2மன்னர் ஒருவர் குருகுலக்கல்வி கற்கும் தன் மகனைப் பார்க்க வந்தார். உடனே குரு ” மன்னரின் மகனை அழைத்து இந்த மூன்றாண்டுகளில் தியானத்தின்போது உன் காதில் என்னென்ன ஓசைகள் விழுந்தது?” எனக் கேட்டார்.

இடியோசை, அருவியின் இரைச்சல், யானையின் பிளிறல், சிங்கத்தின் கர்ச்சனை, புலியின் உறுமல்!” என்று மன்னரின் மகன் கூற, அரசரிடம், ” இன்னும் மூன்றாண்டுகள் கழித்து வாருங்கள் ” என்றார் ஞானி.

அடுத்த மூன்றாண்டு முடிந்து மன்னர் வர, இளவரசனை அழைத்தார் ஞானி. இப்போது, பறவை ஒலி, ஆடு மாடுகளின்குரல்! கேட்டதாக அவன் சொல்ல, அரசனை மேலும் மூன்றாண்டுகள் கழித்து வரச் சொன்னார் ஞானி.

அடுத்த முறை, “வண்டுகளின் ரீங்காரம், வண்ணத்து பூச்சியின் படபடப்பு!” என பதில் வர, “நாட்டை ஆளும் தகுதி உங்கள் மகனுக்கு வந்துவிட்டது. அச்சத்தால் தவிக்கும் மக்களின் மெல்லிய குரல் இனி என் மாணவனின் காதில் என்றும் ஒலிக்கும். இவனை நீங்கள் அழைத்துப் போகலாம்” என விடை தந்தார் ஞானி.




வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 2:45 am)
பார்வை : 187

மேலே