நிற்பதுவே -நிமிட கதை

நிற்பதுவே...
------------
‘‘கா லெல்லாம் வலிக்குதுப்பா..!’’

குனிந்தபடி முழங்கால்களில் கைகளை ஊன்றிக்கொண்டு பரிதாபமாகச் சொன்ன மகனைச் சமாதானப்படுத்தினார் பெரியசாமி. ‘‘கொஞ்சம் பொறுத்துக்கப்பா. அடுத்த பஸ்ல போயிரலாம்!’’

‘‘போங்கப்பா, ஒரு மணி நேரமா இப்படியேதான் சொல்லிட்டு இருக்கீங்க! இப்ப வந்து நின்ன பஸ்லயாவது ஏறியிருக்கலாம்ல?’’

‘‘கூட்டத்தைப் பார்த்தேதானே. உட்கார ஸீட்டே இல்லை. அதுல போயிருந்தா, பஸ் ஸ்டாண்டு வரைக்கும் நின்னுட்டேதான் போகணும்!’’

‘‘இப்பவும் நின்னுட்டுதானே இருக்கோம். இவ்வளவு நேரமா இப்படி ரோட்ல நிக்கிறதுக்குப் பதிலா, பஸ்ல ஏறி நின்னுருந்தோம்னா, இந்நேரம் வீட்டுக்கே போயிருக்கலாம்!’’ என்றான்.

‘‘அட, ஆமாம்தானே!’’

- ஒப்பிலான்

எழுதியவர் : ஒப்பிலான் (9-Nov-15, 6:04 pm)
பார்வை : 203

மேலே