தன்னை வருத்தும்போது

தன்னை வருத்தும்போது
-----
அறிவில்லாதவன் .....
யார் அறிவில்லாதவன் ...?
வெறுமனையே புத்தக ....
அறிவை பெறாதவன் அல்ல ...!!!

தன்னை வருத்தும்போது ...
எதிரி கூட வெறுக்கும் படி ....
தன்னை வருத்துகிறானே....
அவன்தான் அறிவற்றவன் ...!!!

+
குறள் 843
+
புல்லறிவாண்மை
+
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 63

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Nov-15, 10:59 am)
பார்வை : 266

மேலே