ஒழுங்கா வா

ஒரு சந்தோஷமான தம்பதியோட அறுபதாவது வருட நாள் அன்னைக்கு

“எப்டி இவளோ ஒற்றுமையா உங்களால குடும்பம் நடத்த முடிஞ்சது?”ன்னு புருஷன் கிட்ட கேட்டாங்க.அவரு தன்னோட நினைவுகள்ல மூழ்க ஆரம்பிச்சார்

“அப்ப எங்களுக்கு ஹனி மூன் நாங்க ஊட்டில குதிர சவாரி பண்ணிட்டிருந்தோம், ரெண்டு பேரும் குதிரையை கூட்டிட்டு நடந்து போய்ட்டிருந்தோம்,

அவ குதிரை திடீர்னு முரண்டு பிடிச்சது
அவ ஒழுங்கா வான்னு அதட்டுனா,

நான் 'ஏன் கோபப்படுற'ன்னு கேட்டேன் அவ எதும் பேசல.
திரும்ப முரண்டு பிடிச்சது,திரும்ப ஒழுங்கா வான்னா ‘
இனிமே அடம்பிடிச்சா சுட்டுடணும்’னு சொல்லிட்டு துப்பாக்கிய துடைச்சா நான் வெளையாட்டுக்கு சொல்றாள்னு விட்டுட்டேன்
.திரும்ப குதிரை முரண்டு பிடிச்சது, பொசுக்குன்னு சுட்டுட்டா.

நான் கோபமா ஏன் சுட்டேன்னு கேட்டேன்,என்ன ஒரு மாதிரி கோபமா பாத்துட்டே துப்பாக்கிய துடைச்சா...

ஹ்ம்ம்ம்...அப்புறம் ஆயிடிச்சு அறுபது வருஷம்

எழுதியவர் : செல்வமணி (14-Nov-15, 7:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 372

மேலே