இயற்கையின் அமைதி 555

மழைநீர்...

கோடையில் நான் நடந்தேன்
தாகம் என்னைவாட்ட...

தண்ணீருக்காய் ஏங்கிருந்தேன்
நானே தோண்டினேன் ஊற்று...

வழியெங்கும் தவித்த வாய்கள்
பருக ஓடிவந்தது என்னருகே...

இன்று ஊரெங்கும் சூழ்ந்து
இருக்கிறது மழைநீர்...

சேகரிக்க யாரும் இல்லை
நடந்துபோக பாதை இல்லை...

தூற்று போனது முன்னோர்கள்
உருவாக்கிய ஏறி குளங்கள்...

இன்று நாகரிகம் என்ற பெயரில்
வாகனத்தில் செல்வதால்...

உருவாக்க வேண்டாம்
ஏறி குளங்களை...

பாதுகாப்போம் முன்னோர்கள்
நமக்காக விட்டு சென்றதை...

பழமையை காப்போம்
நம்மை வாழவைக்கும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Nov-15, 8:53 pm)
பார்வை : 225

மேலே