காதல் பிரிவு

கண்களால் அனுமதி
கேட்டு உன்னை
வருடிய என் இதயம்
முற்களாய் மறைந்து
போவது என்ன

இதயத்தின் அனுமதி
கேட்டு நீ என்னுள்
நுழைந்தாய்
நுழைந்த
வழிகள் கூட
தெரியாமல்

இருவரும் அனுமதி கேட்டு
துளைந்து போன காதலில்
நீ என்னை விட்டு
பிரிந்து போகும் வேதனை என்னுள்

பிரிந்து போக
யார் உனக்கு அனுமதி தந்தது என என்
உள்ளம் கேட்கா
என் விதியே என்னை
எரித்தது
என் விழிகளே வலியில்
துடித்து உணர்வுளே
வெடித்தது
கண்ணீராய் பொழிதது

என் காதல் பிரிவின்
எதிரியாய் ( நான் ) என
புலம்பி திரிகின்றேன்
என்னை அறிந்து
அழிவதுக்காய்
அல்ல புரிந்து
உணர்வதுக்காய்


கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (24-Nov-15, 1:05 pm)
Tanglish : kaadhal pirivu
பார்வை : 869

மேலே