புதிய ஆற்றுப்படை

பெருமலைக் குருகுகள் சிறகசைவில் காற்றசைக்க
மிடறுநிறை மேல்மலை மேகங்கள் மிளிர்ந்துநளினமிட
உடலிலாச் சுழல்கனல் செம்பொற்கிரணத்தான் காதல்சிதர்தூவ
மனமொப்பா மயிலியற் கெழீயதோர் பசுந்தரைநங்கை
பனிமுத்து மாலையினைப் பிய்த்தெறிந்து படுத்திருக்க
புரிந்தநல் உருவமிலாப் புலவன் வந்து பிறைநுதல்கோதி
ஆற்றுப்படுத்தும் அழகுநிறை காட்சிகொண்டதெம் ஊரே...!




(முதன் முதலாய் புதுமுயற்சியாய் சங்ககாலப் பாணியில் எழுதிய
படைப்பு இது. இலக்கணம் எனக்குத் தெரியாது என்பதால் இதில் இலக்கணம்
ஏதுமில்லை. குறை இருப்பின், அதை நிறையாக்க எனக்கு வழிகாட்டவும்.)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (27-Nov-15, 10:21 pm)
பார்வை : 453

மேலே