தனிமையிலும் உன்னோடு நான்

நீ இல்லாத இரவுகள்
நீண்டுகொண்டே செல்கிறது............
உன்
எண்ணக்கீறல்களால்
சிதைக்கப்பட்ட என் தூக்கம்
தொலைதூர சிறைக்குள் கைதியாக...............

என் கனவுகளும்
கற்பனைக்குள் ஊற்றெடுக்கும் நினைவுகளும்
நம்
காதலின் சிதிலங்கள் தாங்கிய சிந்தனையும்
உன்
கனவுகளுக்காய் காத்திருக்கின்றன........
காற்றிலே சிக்கித் தவிக்கும்
எரிந்திட்ட சாம்பலாய்
இவனது எண்ணங்களும்
திசையறியாமல் தவிக்கின்றன.......

நீ மார்பில் தலை சாய்க்கும்
ஒவ்வோர் நொடியும் - இவனது
இதயம் புதுப்பித்துக் கொள்கின்றது..
நீ
தொட்டுபேசும்போதெல்லாம்
நரம்புகளில் சங்கமிக்கும் குருதியும்
சுத்திகரித்து
சுதந்திரமாக உலா வருகிறது........

எனக்குள் இருக்கும் நீ
என்
உயிராக உறவாடுவதால்தான்
நான்
தனிமையிலும்
தத்தளிக்காமல் வாழ்கிறேன்
உனக்காக..................

- எஸ்.சியாத்-

எழுதியவர் : எஸ்.சியாத்-அட்டாளைச்சேனை08 (28-Nov-15, 3:07 pm)
பார்வை : 763

மேலே