வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை,

ஈசனின் அருள் இல்லையேல் வெற்றி காணமுடியாது

அவனிடம் நம்பிக்கை வைத்தால்தான் அவனருள் நமக்குக் கிடைக்கும்

பக்தர்கள் எதைக் கொடுக்கிறார்கள் என்று ஈசன் பார்ப்பதில்லை என்ன நோக்கத்தோடு கொடுக்கிறார்கள் என்றுதான் பார்க்கிறார்கள்

சிவலிங்கத்தின் மேல் கல்லை விட்டெறிந்த சாக்கிய நாயனருக்கு அருள் பாலித்தார்

அவர் மேல் மலரை எறிந்த மன்மதனுக்கு மரணத்தை அளித்தார்

அவர் நம்மிடம் இலை மலர் கனி நீர் ஆகியவற்றைத்தான் எதிர்பார்க்கிறார் அவற்றை பக்தியோடு அளிக்க வேண்டும்

அவர் நமக்களித்துள்ள அறிவை ஈசனின் புகழ் பாடி அவரை அடைய பயன்படுத்த வேண்டும்.

வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை,
ஆனால் வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு.....

அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்..

அன்பே சிவம்....

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (29-Nov-15, 6:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 801

மேலே