மோகனுக்கு வந்த போன் கால்

மோகன் தன் பையன் ஆனந்த்வுடன் விளையாடிக்கொண்டுஇருந்தான்

அப்போது மோகனின் செல்போன் அடிக்க இல்லைஇல்லை பாடத்தொடங்கியது

தாலியே தேவையில்ல நீதான் என் பொன்ஜாதி என

மோகன்: கண்ணம்மா அடியே என் பொன்ஜாதி போனை எடுமா

கண்ணம்மா: இந்தாங்க மாமா ஏதோ ஃபாரின் நம்பர்

மோகன்: ஃபாரினா கொடு ஹலோ சொல்லுங்க

எதிர்பக்கம்: ஹலோ ஹலோ

மோகன்: சொல்லுங்க கேக்குது யாரு

எதிர்பக்கம்: நான்தான்

மோகன்: நான்தான்னா யாரு

எதிர்பக்கம்: நான்தான் பூஜா

பூஜா: ஹலோ ,,,,,ஹலோ

மோகன்:

பூஜா: என்ன மறந்துடைய

மோகன்: இல்ல என்ன மறந்துட்டேன் ஒரு நிமிஷம் இரு வெளிய வரேன்

முப்பது நொடிக்குள்

மோகன்: ஹலோ பூஜா எங்க இருக்க

பூஜா: சிங்கப்பூர்ல

மோகன்: நல்ல இருக்கேல நீ நல்லதான் இருக்கனும்
அதுக்காக தானே இதுயெல்லாம்

பூஜா: ம்,,,,, இருக்கேன் நீ

மோகன்: இருக்கேன்
ஆமா என் நம்பர் எப்படி உனக்கு

பூஜா: fbல எடுத்தேன்

மோகன்: fb னா

பூஜா: facebook

மோகன்: ok ok

அதற்குள் மோகனின் பையன் ஆனந்த் ஒடிவந்து அப்பா வா விளையாடலாம் என கூப்பிட்டான்

மோகன்: டேய் அம்மாகிட்ட விளையாடுடா அப்பா ஐஞ்சுநிமிஷத்துல வரேன் போ

பூஜா: உன் பையனா

மோகன்: ஆமாம்

பூஜா:பேரு

மோகன்:ஆனந்த்
ஏய் உனக்கு பசங்க???

பூஜா:ம் ஒரு பையன்

மோகன்:பேரு

பூஜா:

மோகன்:ஹலோ இருக்கய

பூஜா: இருக்கேன் மோகன்

மோகன்: பேரு கேட்டேன்

பூஜா:சொல்றேன் மோகன்

மோகன்:சொல்லு

பூஜா: அதான் சொல்லிட்டேனே மோகன்

மோகன்:எப்ப

பூஜா:மோகன்னு சொன்னேனே மோகன்

சில வருடம் முன்

காதலன்: ஏய் நமக்கு ஆம்பள குழந்தை பொறந்தா என்ன பேரு வைக்கலாம்

காதலி: உன் பேருதான் வைக்கனும்

காதலன்:என் பேரா ஏன்

காதலி: அப்பதானே குழந்தையைதிட்டுர மாறி உன்னை ஜாடையா திட்டலாம் அதான்

காதலன்: அடிபாவி

சில வருடம் கழித்து

மோகன்: அப்பனா உன் பையனை நீ தீட்டவே மாட்ட எனக்கு தெரியும்

பூஜா: மனதுக்குள் சிரித்துக்கொண்டு ஆமாம் ஆமாம்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (30-Nov-15, 5:11 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 411

மேலே