வெள்ளத்தில் மூழ்கிய கார், பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா
வெள்ளத்தில் மூழ்கிய கார், பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?
By Vikatan, 05 Dec 2015 07:43 PM
வாகனம் XXX இந்த பாலிசியில் கவராகியுள்ளது. இப்பொழுது (தேதி, நேரம் குறிப்பிட்டு) மழைநீரில் மூழ்கி பழுதடைந்து நிற்கிறது. ஸ்பாட் சர்வே செய்து இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இந்த இரண்டு வரிகளிலேயே இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்குகிறது.
க்ளெய்ம் கிடையாது ஆனால் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், வெள்ளம் அல்லது மழை நீரில் பாதிப்படைந்த காரை இயக்கி, அதனால் இன்ஜின் சேதமடைந்தால் க்ளெய்ம் தரமாட்டார்கள். இதை தங்களது விதிகளில் குறிப்பிட்டுருப்பார்கள்.
ஏனெனில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் க்ளெய்ம் பொறுத்தவரை அவர்களுக்கு முதல் மூலக்காரணம் எதிர்பாராத செயலாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தை இயக்க செய்தால் அது திட்டமிட்ட செயலாக மாறிவிடுகிறது.
எனவே வாகனம் எந்த நிலைமையில் இருக்கிறதோ அதே நிலைமையில் ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது அவர்களுடைய இமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துவதே நல்லது. இப்போது சென்னையில் பெரும்பாலான கார், பைக் மழை நீரினால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை நீரினால் கார், பைக் பாதிப்படைந்துள்ளது என்ற காரணத்தினால் க்ளெய்ம் வழங்குவார்கள்.
இமெயில் அனுப்புங்க
ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொள்ளக்கூடிய போன் நம்பர் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து தெரியப்படுத்துங்கள் அல்லது அந்த நிறுவனத்தின் பொதுவான இமெயில் ஐடி-க்கு தெரியப்படுத்தலாம்.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடுகளைக்கோர எழுதித்தான் தர வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. இப்பொழுது உள்ள வசதிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செல்போன் நம்பருக்கே வாட்ஸ்அப் மூலமாக பாதிக்கப்பட்ட வாகனத்தை போட்டோ எடுத்து தெரியப்படுத்தலாம்.
வீடு பழுதடைந்து இருந்தாலும் அதையும் ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.
வெளியே பாதிப்படைந்தால்?
வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டாலும் க்ளெய்ம் கிடைக்கும். வாகனம் வீட்டில் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே க்ளெய்ம்,
வேறு ஏதாவது ஒரு இடத்தில் மழை நீர் அல்லது வெள்ளத்தால் பாதிப்படைந்து இருந்தால் க்ளெய்ம் கிடையாது?
அப்படி எதுவும் இல்லை. வாகனம் பாதிப்படைந்ததற்கு மூலக்காரணம் எது என்று ஆராய்ந்து சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் வழங்குவார்கள்.
ஸ்பாட் போட்டோ இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்திய பின்னர், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுடைய வாகனம் எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கே சென்று அந்த நிறுவனத்தின் சர்வேயர் பார்வையிடுவார்.
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-க்காக வாகன விபத்தின்போது 'ஸ்பாட் போட்டோ' எடுப்பார்கள். அதேபோல் மழைநீரில் பாதிக்கப்பட்ட வாகனத்தை ஒரு ஸ்பாட் போட்டோ எடுத்து வைப்பது நல்லது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் ஸ்பாட் போட்டோ மற்றும் பாதிப்பை ஆராய்ந்து பாதிப்படைந்தவர்களுக்கு க்ளெய்ம் வழங்குவார்கள்.
டோயிங் சார்ஜ் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ஆனது மழை வெள்ளத்தில் வாகனத்தின் பாதிப்பு மற்றும் தேய்மானத்தைப் பொறுத்து வழங்குவார்கள். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் டோயிங் சார்ஜ்-ம் கிடைக்கும். அதாவது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் பாதிப்படைந்த வாகனத்தைப் பார்த்து அதை எடுத்து செல்வதற்கான செலவும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் கிடைக்கும்.
பாலிசிதாரரின் கடமை சென்னையில் சில இடங்களில் வெள்ளம் வடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனாலும் பாதிப்பு இருக்கும்போதே பாதிக்கப்பட்டவர்கள் கார், பைக் அல்லது வீட்டின் தற்போதைய நிலைமையை ஒரு போட்டோவாக எடுத்து வைத்திருங்கள்.
தண்ணீரில் மூழ்கி இருக்கும் வாகனத்தை, தண்ணீர் வடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஸ்டார்ட் செய்தால் க்ளெய்ம் கிடைக்காது. ஆகையால் வாகனத்தை இயக்காமல் இருப்பதே நல்லது.
க்ளெய்ம்-க்கு அடிப்படையே எதிர்பாராத செயலாக இருக்க வேண்டும் என்பதுதான்.
உடனே அணுகுங்க க்ளெய்ம் பெற பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுக வேண்டும் என்று தெரிவித்து இருப்பார்கள்.
ஆனால், இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உடனே அணுக முடியாது. ஆகையால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு இமெயில் அனுப்பினாலே போதும். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்குவதற்கு உதவிகரமாக ஒரு போட்டோ இருந்தாலே போதும்.
வேறு எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை. அதற்காக காலம் கடத்தக் கூடாது. உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கோருவதே நல்லது என்று திருமலை கூறினார்.
________________________________
நன்றி: விகடன்
தகவல் - சோ.கார்த்திகேயன்