பால்
பிறப்பால்
நான் ஆண்பால்
ஆரம்ப உணவாக
இருந்தது தாய்ப்பால்
பிறகு நான் குடித்தது
பசும் பால்
தந்தை தந்தது
அறிவுப்பால்
ஆசான் போதித்தது
ஒழுக்கத்துப்பால்
பள்ளி அளித்த
படிப்பால்
நான் எழுதுகிறேன்
கவிப்பால்
நான் புத்துணர்வு பெற்றது
என் நட்பால்
அவர்கள் காட்டும் அன்பால்
எனை நானும் மறேந்தேன் என்பால்
குடும்பத்தின் புனிதத்தை
அறிந்தேன் உறவால்
என்னுடன் சேர்ந்தது
ஒரு பெண்பால்
பின் எங்கள் திருமணத்தால்
நான் உணர்ந்தது காமத்துப்பால்
எண்களின் கலப்பால்
உருவானது மழலைப்பால்
அனைவரையும் மகிழ்விப்பேன்
என் சிரிப்பால்
யாவரும் பெருமை கொள்வர்
என் நற்பண்பால்
இந்த அழகான வாழ்விற்கு
நன்றி நவில்கிறேன் அவன்பால்
ஆனந்த் சுப்ரமணியம்